பொதுமக்கள் மூலிகைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு மூலிகைகளை அறிமுகப்படுத்தி பயன்படுத்தும் பயிற்சி மூலிகை முற்றம் என்ற பெயரில் 2017ம் ஆண்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.உலகத் தமிழ் மருத்துவக் கழக நிகழ்ச்சிகளில் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் மூலிகை முற்றம் நிகழ்ச்சியும் ஒன்றாகும். மூலிகை முற்றம் தொடர் பயிற்சி வகுப்புகள் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்துடன் இணைந்து மாவட்ட அறிவியல் மையத்தில் நடத்தப்பட்டது.தொடர் வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மூலிகைக் கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு மீண்டும் மூலிகை முற்றம் 2.0 தொடர் பயிற்சி நிகழ்ச்சி பாவநாசம் உலகத் தமிழ் மருத்துவக் கழக மாநில வள மையத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
This site was designed with Mobirise