சித்த மருத்துவர்களுக்கும் சித்த மருத்துவ மாணவர்களுக்கும் சித்த மருத்துவம் மீதான நம்பிக்கையை மிகுதி ஆக்குவதற்கும், சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றிய மேலதிக தகவல்களை கொடுப்பதற்கும்,பொதுமக்களுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் 1992ஆம் ஆண்டு கற்ப அவிழ்தம் என்ற சித்த மருத்துவ மாத இதழ் உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தால் தொடங்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
சித்தமருத்துவ மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இன்று வரை சிறந்த ஊடகமாக திகழ்ந்து வருகிறது. சூன் 2020 வரை 337 இதழ்கள் வெளியிடப்பட்டு உள்ளன.